முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Oct 18, 2022
8:59PM

புதுதில்லியில் இன்று 90-வது இன்டர்போல் பொதுசபைக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

NEWS ON AIR
புதுதில்லியில் இன்று 90-வது இன்டர்போல் பொதுசபைக் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், இணையதள குற்றங்கள் மற்றும் எல்லைப்பகுதியில் ஊடுறுவல்கள் உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் குறித்து உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று பிரதமர் திரு நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.
புதுதில்லியில் இன்று 90-வது இன்டர்போல் பொதுசபைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு முடிவு கட்டவும், சதித்திட்டங்களை முன்கூட்டியே அறிந்து அவற்றை முறியடிக்கவும், தொழில்நுட்ப ரீதியாக கண்காணிப்பு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஆன்லைன் மூலமாக அடிப்படைவாத கருத்துக்களை பரப்புவது,  மக்களை ஏமாற்றுவது போன்ற செயல்களில் தீவிரவாத அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக பிரதமர் எச்சரித்தார். 
சட்ட ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.
அமைப்பு ரீதியாக கட்டமைக்கப்பட்ட குற்றங்கள், ஊடுறுவல்கள், பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவற்றை எதிர்கொள்ள வலுவான கண்காணிப்பை இன்டர்போல் அமைப்பு உருவாக்க வேண்டுமென்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
ஏழை எளிய மக்களிடமிருந்து ஊழல் மூலமாக சுரண்டப்படும் பணம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு செல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
காவல்துறையும், கண்காணிப்பு அமைப்புகளும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டுமென்றும், இன்டர்போல் அமைப்பு இதனை ஒருங்கிணைக்க வேண்டுமென்றும் திரு நரேந்திரமோடி கேட்டுக் கொண்டார். 

   தொடர்புடைய செய்தி

18867

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1