முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Oct 21, 2022
3:58PM

பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, காவலர் வீர வணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

NEWS ON AIR
பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, காவலர் வீர வணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாளையொட்டி புதுதில்லியில் உள்ள தேசிய காவலர் நினைவு சின்னத்தில் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மலர்வளையும் வைத்து மரியாதை செலுத்தினார். 
இந்த தினத்தையொட்டி திரு அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,  வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்திற்கு தேசம் மரியாதை செலுத்துவதாகவும், அவர்களது சேவை  என்றென்றும் நினைவுகூரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்நாளையொட்டி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவுத் தூணில், தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரு சைலேந்திரபாபு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1