முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Jul 14, 2020
11:09AM

பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய நாடுகள் குழுத் தலைவர்கள் தலைமையில் இந்தியா ஐரோப்பா உச்சி மாநாடு நடைபெறும்.

NEWS ON AIR
பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய நாடுகள் குழுத் தலைவர் திரு. சாரலஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் மெர் லெயன் ஆகியோர் தலைமையில் இந்திய ஐரோப்பா உச்சி மாநாடு நடைபெறும்.
கோவிட் தொற்று காலத்தில் நிலவிய வர்த்தக சூழல் வெளிநாட்டு வர்த்தகத்தில் ஏற்பட்ட பின்னடைவு மக்களின் இடம் பெயர்தலால் எழுந்துள்ள சவால்கள் போன்றவை குறித்து இம்மாநாட்டில் ஆலோசனைகள் இடம் பெறும்.
இந்தியா ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தக உறவுகள் முதலீடுகள் பொருளாதார விவகாரங்கள் போன்றவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. உலகளாவிய சூழலில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இந்தியாவுடன் இணைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் இக் கூட்டத்தில் பேசப்படும்.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஐரோப்பிய யூனியனுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவர்களுடன் உச்சி மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். 

   தொடர்புடைய செய்தி

8772

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1