முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

May 30, 2020
2:11PM

மத்தியில் பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.

NEWS ON AIR
 மத்தியில் பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.

    இதனையொட்டி பிரதமர் திரு நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    மத்தியில் முழு அறுதிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக தமது அரசு இதேநாளில் பதவியேற்றதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    நாட்டின் ஜனநாயகத்தில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்ட அத்தியாயம் இது என்றும், பிரதமர் கூறியுள்ளார்.

    இந்த தீர்ப்பினை வழங்கியதற்காக 130 கோடி மக்களுக்கும் தாம் தலை வணங்குவதாகவும் திரு நரேந்திரமோடி கூறியுள்ளார்.

    மக்கள் நலனுக்காக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களையும் அந்த கடிதத்தில் அவர் பட்டியலிட்டுள்ளார்.

    நாட்டு நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை தமது அரசு மேற்கொண்டதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

    கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் தமது சுயசார்பு மற்றும் தன்னம்பிக்கை மூலம் உலக நாடுகள் இந்தியாவை திரும்பிப் பார்த்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    இந்த நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இவற்றை களைவதில் தமது அரசு உறுதியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதனை கருத்தில் கொண்டுதான் சுயசார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார புத்துயிர் தொகுப்பு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

    பொருளாதாரத்திற்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென்றும் பிரதமர்  தெரிவித்துள்ளார்.

வளர்ச்சியின் பாதையை நோக்கி நாம் பயணிக்கும்போது வெற்றி நிச்சயம் நம்மை தேடி வரும் என்றும் திரு நரேந்திரமோடி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

   தொடர்புடைய செய்தி

8339

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1