முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Mar 20, 2020
7:30PM

பிரதமர் மோடி,மாநில முதலமைச்சர்கள் & சுகாதார துறை உயரதிகாரிகளுடன் கோவிட்-19 ன் குறித்து காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

NEWS ON AIR
பிரதமர் திரு. நரேந்திரமோடி, அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் சுகாதார துறை உயரதிகாரிகளுடன், கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் திரு. நரேந்திரமோடி, அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் சுகாதார துறை உயரதிகாரிகளுடன்,கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தற்போது காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே இன்று புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் திரு. லவ் அகர்வால்,கோவிட்-19 தொற்றால் நாட்டில் 223-பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 191-பேர் இந்திய குடிமக்கள் என்றும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் 23-பேர் உரிய சிகிச்சைக்குப்பின் முற்றிலுமாக குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு. நரேந்திரமோடி, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அழைப்பு விடுத்துள்ள மக்கள் ஊரடங்கு நடவடிக்கைக்கு நாட்டு மக்கள்  முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.





   தொடர்புடைய செய்தி

7780

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1