முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Mar 13, 2020
7:15PM

வனம், சுற்றுலா, பள்ளிக்கல்வி, விளையாட்டு, உயர்க்கல்வி துறைகளில் 750 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள்- முதலமைச்சர் அறிவிப்பு

NEWS ON AIR
வனம், சுற்றுலா, பள்ளிக்கல்வி, விளையாட்டு, உயர்க்கல்வி ஆகிய துறைகளில் சுமார் 750 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்புகளை முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு தலா 35 கோடி ரூபாய் வீதம் 210 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை அளித்த அவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக 150 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றார்.
மாநிலத்தில் 4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 48 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.


   தொடர்புடைய செய்தி

7552

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1