முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Feb 20, 2020
9:26PM

அரசியல் சட்டத்தின் 371-வது பிரிவை நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை -அமித் ஷா.

NEWS ON AIR
அரசியல் சட்டத்தின் 371-வது பிரிவை நீக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா  தெரிவித்துள்ளார்.
இட்டா நகரில் இன்று அருணாச்சலப் பிரதேசம் உருவான 34-ம் ஆண்டு விழாவில் பேசிய அவர், கடந்த ஆண்டு அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு சலுகைகளை உறுதி செய்யும் 371-வது சட்டப் பிரிவையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களுக்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் இடையே வேற்றுமையை வளர்க்கும் நோக்கில் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த சட்டப் பிரிவை யாராலும் நீக்க முடியாது என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
2014-ம் ஆண்டு வரை வடகிழக்கு மாநிலங்கள் பூகோள மற்றும் நிர்வாக ரீதியாகத் தான் இந்தியாவுடன் இணைந்திருந்தது என்றும், பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பிறகு, வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் இதயத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் திரு.அமித் ஷா  குறிப்பிட்டார்.
வடகிழக்கு மாநிலங்களில் தனித்துவம் மிக்க பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் திரு மோடி கடந்த ஐந்தாண்டுகளில் 30 முறை வடகிழக்கு மாநிலங்களை பார்வையிட்டு, அவற்றின் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கும் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் தொழில் முதலீட்டுக் கொள்கையையும் அவர் தொடங்கி வைத்தார்.
ஜோராம் கோலரியாங் சாலை, மாநிலத்தின் நகர்புறங்களுக்கான 148 சுகாதார வாகனங்கள் ஆகியவற்றையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இட்டா நகரில் காவல்துறை தலைமையகம், சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி, முதியோருக்கான வீட்டுவசதி திட்டம் ஆகியவற்றிற்கும் திரு.அமித் ஷா  இன்று அடிக்கல் நாட்டினார்.


உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1