முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Feb 15, 2020
2:11PM

குறைந்த செலவில் நீடித்து செயல்படக்கூடிய பேட்டரிகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

NEWS ON AIR
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் குறைந்த செலவில் நீடித்து செயல்படக்கூடிய பேட்டரிகள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் திரு.நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.
இன்று புதுதில்லியில் அறிவில் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் குழுமத்தின் கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் பேசினார்.
சர்வதேச தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பாரம்பரிய மற்றும் நவீன நடைமுறைகள் பின்பற்றுவது அவசியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். 
பிற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களோடு இணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார்.
மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் பணியாற்ற வேண்டுமென்றும் திரு.நரேந்திரமோடி கேட்டுக் கொண்டார்.


   தொடர்புடைய செய்தி

6627

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1