முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Feb 04, 2020
3:58PM

பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 7-ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜாருக்கு செல்கிறார்.

NEWS ON AIR
பிரதமர் திரு நரேந்திர மோடி போடோ அமைப்பினருடன் ஏற்படுத்திய உடன்பாட்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வரும் 7-ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜாருக்கு செல்கிறார்.
அஸ்ஸாம் முழுவதிலும் இருந்து 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மாநிலத்தை சேர்ந்த பழங்குடி மக்களின் கலை, கலாச்சார நிகழ்ச்சிகளும் பிரதமர் கலந்துகொள்ளும் கூட்டத்தில் நடைபெறும்.
மத்திய அரசு, அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் போடோ அமைப்புகளுடன் ஏற்படுத்திய முத்தரப்பு உடன்பாடு அரசின் சாதனையாக கருதப்படுகிறது. 
சென்ற மாதம் 27-ஆம் தேதி இந்த வரலாற்று சிறப்புமிக்க உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.


   தொடர்புடைய செய்தி

6299

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1