முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Jan 29, 2020
12:45PM

வரலாற்றுப் பிழையை சரிசெய்யவே குடியுரிமை திருத்தச் சட்டம்-பிரதமர்.

NEWS ON AIR
    பயங்கரவாதத்திற்கு எதிராக இளைஞர்கள் போராடுவார்கள் என்று  பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
    புதுதில்லி கரியப்பா மைதானத்தில் நேற்று தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர், கஷ்மீரை பயங்கரவாத பிரச்சினையில் இருந்து தமது அரசு மீட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
    நாடு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே ஜம்மு கஷ்மீரில் பிரச்சினை இருந்ததாகவும், இதற்கு தீர்வு காண முந்தைய அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கஷ்மீர் நாட்டின் அணிகலன் என்றும், அங்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
    குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், பாகிஸ்தானில் மத சிறுபான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கிலேயே இதுகொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  
வரலாற்று பிழையை சரிசெய்யவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக நடத்திவரும் மறைமுக போரை நிறுத்தாவிட்டால் ராணுவம் அதற்கான தீர்வை தரும் என்றும் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.

   தொடர்புடைய செய்தி

6114

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1