முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Oct 21, 2022
7:37PM

காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

NEWS ON AIR
காவல் துறையினர் மற்றும் மத்திய ஆயுத காவல்படையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார்.
காவலர் வீர வணக்க தினத்தையொட்டி, இன்று புதுதில்லியில் உள்ள தேசிய காவலர் நினைவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
நாட்டை பாதுகாப்பதற்காக 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும், மத்திய ஆயுத காவல் படையினரும் தங்களது இன்னுயிரை நீத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருவதாக அவர் கூறினார்.
உள்நாட்டு பாதுகாப்பில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்டுவரும் உறுதியான நடவடிக்கைகள் காரணமாக, நக்சலைட் பிரச்சினைகள் வெகுவாக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
காவல்துறையினருக்கு உரிய வீட்டுவசதி மற்றும் மருத்துவ வசதிகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் திரு அமித் ஷா கூறினார்.

   தொடர்புடைய செய்தி

18880

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1