முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Jun 06, 2022
10:42AM

கடந்த எட்டாண்டு கால பிஜேபி ஆட்சியில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக பிஜேபி தலைவர் திரு. ஜெ.பி. நட்டா கூறியுள்ளார்.

NEWS ON AIR
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான கடந்த எட்டாண்டு கால ஆட்சியில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக பிஜேபி தலைவர் திரு. ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
ராஞ்சியில் நேற்று பிஜேபி பழங்குடியினர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 22 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைந்துள்ளது என்று கூறினார்.
பெரும்பாலான பழங்குடியினர் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக கடந்த எட்டாண்டுகளில் அனைவருக்கும் சுகாதார காப்பீட்டுத் திட்டம், பிரதமர் வீட்டு வசதித் திட்டம், தூய்மை இந்தியா இயக்கம் உள்ளிட்டவற்றை மத்திய  அரசு தொடங்கியதாகவும் திரு. ஜெ.பி. நட்டா கூறினார்.

   தொடர்புடைய செய்தி

17672

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1