முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Apr 25, 2022
7:19PM

இந்திய கடற்படை தளபதிகளின் நான்கு நாள் மாநாடு புதுதில்லியில் இன்று தொடங்கியது.

NEWS ON AIR
இந்திய கடற்படை தளபதிகளின் நான்கு நாள் மாநாடு புதுதில்லியில் இன்று காலை தொடங்கியது.
கடல்சார் பாதுகாப்பு நாட்டின் கடல் எல்லைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டின்போது விவாதிக்கப்படும்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக அவர்கள், அதிகாரிகளுடன் கலந்துரையாட உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
முப்படைகளுக்கு பொதுவான விவகாரங்கள் குறித்தும், ஒருங்கிணைந்த முறையில் செயலாற்றுவது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த ஆறு மாதங்களாக இந்திய கடற்படையின் செயல்பாடுகள், பயிற்சித் திட்டங்கள், மனித ஆற்றல் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும்.
ரஷ்யா – யுக்ரைன் சர்ச்சைகளுக்கு இடையே கடல்சார் பாதுகாப்பு குறித்த இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. 

   தொடர்புடைய செய்தி

17070

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1