முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Aug 15, 2021
6:12PM

இளைஞர்களின் கையில்தான் எதிர்காலம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

NEWS ON AIR
இளைஞர்களின் கையில்தான் எதிர்காலம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருவதாக தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார்.

75 ஆவது சுதந்திர தினம், சுபாஷ் சந்திரபோஸின் 125 ஆவது பிறந்த ஆண்டு மற்றும் மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு  ஆண்டை முன்னிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த 13 கல்வி நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக அவர் உரையாற்றினார்.

சைனிக் பள்ளிகளில் இதுவரை ஆண்கள் மட்டுமே பயின்று வந்த நிலையில் இனி பெண்களும் பயில அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் சுதந்திர தின உரையில் அறிவித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

பாரதியின் ஆண்-பெண் சமத்துவத்தை பிரதிபலிப்பதாக இது உள்ளது என்றும் அவர் கூறினார்.

கலாச்சாரத்தை பாதுகாக்கும் அதே வேளையில்  விஞ்ஞான ரீதியில் எதிர்கால திட்டமிடல் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படுவதையும் டாக்டர் முருகன் தெரிவித்தார்.

   தொடர்புடைய செய்தி

14455

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1