முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Jan 04, 2021
12:22PM

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மூலம், விவசாயிகளுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும் -பிஜேபி மாநிலத் தலைவர் திரு. எல் முருகன்.

NEWS ON AIR
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மூலம், விவசாயிகளுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும் என்று பிஜேபி மாநிலத் தலைவர் திரு. எல் முருகன் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் பிஜேபி நிர்வாகிகள் பங்கேற்ற மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
பிஜேபி மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அடிப்படையில்தான் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் தான், இந்த சட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஏழை மக்களின் மேம்பாட்டிற்காகவும், விவசாயிகளின் நலனுக்காகவும் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை, அரசியல் ஆதாயத்திற்காக திமுக எதிர்ப்பதாகவும் திரு. எல். முருகன் கூறினார். 

   தொடர்புடைய செய்தி

11373

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1