முக்கிய செய்திகள்
மலைப்பகுதிகளின் போக்குவரத்து வசதி மேம்பாட்டிற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்துள்ளது - பிரதமர் திரு நரேந்திர மோடி            மீனவர்களின் மேம்பாட்டிற்காக கடந்த எட்டாண்டுகளில் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது - மீன்வளத்துறை இணையமைச்சர் திரு எல். முருகன்            காவல் துறையினரின் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.            பிரதமர் திரு நரேந்திரமோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.            மன்னார்வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த படகை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.           

Dec 04, 2020
2:43PM

இந்திய கடற்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

NEWS ON AIR
இந்திய கடற்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இதே நாளில் கராச்சி துறைமுகத்தில் நான்கு பாகிஸ்தான் கப்பல்களை இந்திய கடற்படை மூழ்கடித்து வெற்றி கொண்டதன் நினைவாக கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
கடற்படை தினத்தையொட்டி வீரம் செறிந்த இப்படையின் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடற்கரைப் பகுதிகளை அச்சமின்றி பாதுகாக்கும் இந்திய கடற்படை தேவைப்படும் நேரத்தில் மனிதாபிமான உதவிகளையும் செய்வதாக பிரதமர் வாழ்த்துக் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பதில் சமரசமற்ற உறுதிப்பாட்டை கொண்டுள்ள வீரம் மிக்க கப்பற்படை வீரர்களை எண்ணி இந்தியா பெருமிதம் கொள்கிறது என்று கூறியுள்ளார்.
இயற்கை சீற்றங்களின்போது தேசத்திற்கு இந்த படை வீரர்கள் சேவை செய்வதையும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   தொடர்புடைய செய்தி

10849

உடனடி டுவிட்டர் பதிவு

தற்போதைய வானிலை

24 Nov 2021
City MaxoC MinoC
தில்லிULL 26.7 9.2
மும்பை 34.0 23.0
சென்னை 32.4 25.0
கொல்கத்தா 30.9 20.7
பெங்களூரு 29.8 20.1